ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி பிரதமர் மோடிக்கு அழைப்பு!
Apr 26, 2024, 18:55 IST
இத்தாலியில் ஜூன் 13 முதல் 15 வரை தொடர்ந்து 3 நாட்கள் ஜி7 உறுப்பு நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி நாட்டு பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி, தொலைபேசி மூலம் இத்தாலி பிரதமரிடம் பேசி நன்றி தெரிவித்தார். அந்த உரையாடலில் பரஸ்பர விசாரிப்புக்கள், இரு தரப்பு ஒத்துழைப்பு பொதுவான பிரச்சனைகள் குறித்து பேசிவிட்டு மாநாட்டின் பங்கேற்க வருமாறு அழைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!