போதைப்பொருள் கடத்தல் வழக்கு... மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் மன்சூர் அலிகானின் மகன் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப் பொருட்களை விற்றதாக கல்லூரி மாணவர்கள் 5 பேரை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலி கானின் மகன் அலிகான் துக்ளக்கை போலீசார் கடந்த 4-ம் தேதி கைது செய்தனர்.
அவரது ஜாமீன் மனு, அம்பத்தூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
‘போதைப் பொருள் கடத்தலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னிடம் எந்த போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை’ என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!