நிஃப்டி 24,426 புள்ளிகளாக சரிந்தது... சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!
இன்றைய பங்குச் சந்தையில் இறுதி நேர விற்பனை அழுத்தத்தின் மத்தியில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிவடைந்தன.
சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்த நிலையில், நிஃப்டி 24,426.85 புள்ளிகளாக நிறைவடைந்தது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 270.92 புள்ளிகள் சரிந்து 79,809.65 புள்ளிகளாகவும், நிஃப்டி 74.05 புள்ளிகள் சரிந்து 24,426.85 புள்ளிகளாகவும் நிலைபெற்றது. பிஎஸ்இ-யில் மிட்கேப் குறியீடு 0.4 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.3 சதவிகிதமும் சரிந்து முடிந்தன.
இந்த வாரத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1.8 சதவிகிதம் வரை சரிந்தன. ஆகஸ்ட் மாதத்தில் தலா இரண்டு குறியீடுகளும் 1.5 சதவிகிதம் வரை சரிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 3,084 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,319 பங்குகள் உயர்ந்தும் 1,668 பங்குகள் சரிந்தும் 97 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.
நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஐடிசி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், டிரென்ட், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை உயர்ந்து முடிந்த நிலையில் எம் அண்ட் எம், இன்ஃபோசிஸ், அப்பல்லோ மருத்துவமனைகள், அதானி எண்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
செப்டம்பர் 2 அன்று நிதி திரட்டும் திட்டத்தை வாரியம் பரிசீலிக்கவிருந்ததால் ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் பங்கு விலை 3% அதிகரித்தது. பத்திர ஒதுக்கீடு மூலம் 300 மில்லியன் டாலர் திரட்டியதால் சம்மன் கேபிடல் பங்குகள் 5% க்கும் அதிகமாக உயர்ந்தன.
பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் நிறுவனம் ரூ.9.5 கோடி மதிப்புள்ள பேக்கிங் ஒர்க் ஆர்டரை பெற்றதையடுத்து அதன் பங்குகள் 2% அதிகரித்தது. ரூ.80 கோடி வரை நிதி திரட்டுவதற்கான ஒப்புதலை வாரியம் வழங்கிய நிலையில் டிரக்ஸ் நிறுவன பங்குகள் 5% சரிந்தன. எஸ்எம்பிசி ரூ.16,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக வெளியான தகவலால் யெஸ் வங்கி பங்குகளின் விலை 2% உயர்ந்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!