undefined

 கடைசி நிமிடங்களில் நிமிஷா பிரியா மரண தண்டணை நிறுத்தி வைப்பு...  ஏ.பி.அபூபக்கர்!

 
 


 
 கேரளாவை பூர்வீகமாக கொண்ட  செவிலியர் நிமிஷா பிரியா. இவர் ஏமனில்  2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர். 2020ல் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இத்தண்டணை 2023ல் உறுதி செய்யப்பட்டது.  இந்த தண்டனை இன்று ஜூலை 16, 2025 அன்று நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் இந்த மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் ஷரியா சட்டப்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பம் ‘தியா’ (இழப்பீட்டு பணம்) ஏற்க முன்வந்தால் மரண தண்டனையை ரத்து செய்ய முடியும். எனவே, நிமிஷா பிரியா இந்த தண்டனையில் இருந்து காப்பாற்ற அவருடைய குடும்பமும், இந்திய அரசாங்கமும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, கடந்த ஒரு வருடமாக ஏமனின் சனாவில் தங்கி, மஹ்தியின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ரத்தப் பணம் வழங்கி மன்னிப்பு பெற முயற்சித்து வருகிறார்.

ஆனாலும், மஹ்தியின் குடும்பத்தினர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.  நம்பிக்கை விடாமல் அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருந்த நிலையில்  அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் முக்கிய முஸ்லிம் தலைவரும், கேரள இஸ்லாமிய தலைவருமான கந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தலையீட்டால், நிமிஷாவை காப்பாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஏமனில் முன்னேறி வந்ததாக தகவல்கள் வெளியாகின.  
இந்தியாவின் 10 வது மற்றும் தற்போதைய கிராண்ட் முஃப்தி  ஷேக் அபூபக்ர், ஏமனில் உள்ள முக்கிய இஸ்லாமிய அறிஞர்களைத் தொடர்பு கொண்டு பேசினார். அதில்  “இஸ்லாம் மனிதநேயத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.  ஏமனில் உள்ள அறிஞர்கள் ஒன்று கூடி இதைப் பற்றி பேசினார்கள். பிறகு, “நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்” என்று சொன்னார்கள். இதன் விளைவாக, நிமிஷாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.  


இதை உறுதிப்படுத்த ஒரு ஆவணத்தையும் அவர்கள் ஷேக் அபூபக்ருக்கு அனுப்பினார்கள். இந்த நிறுத்தம், இனி இந்த வழக்கில் மேலும் பேச்சு வார்த்தைகள் நடத்த உதவும்.ஷேக் அபூபக்கர் இதை  பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.  தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டது என்பது, நிமிஷாவின் உயிரைக் காப்பாற்ற இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். ஷேக் அபூபக்ரின் முயற்சியால் இந்த மாற்றம் வந்தது. இனி இந்தியாவும், ஏமனும் பேசி, இந்த வழக்கைத் தீர்க்க முயற்சிக்கலாம்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?