தமிழகம்  முழுவதும் 1,000 இடங்களில் ORS பாக்கெட்டுகள்.... அதிரடி உத்தரவு!

 

 தமிழகம் முழுவதும் மேலும் 5 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  பகல் 12 மணி முதல் 3 மணி வரை கர்ப்பிணிகள் குழந்தைகள் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல் அமைக்க மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பல்வேறு அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தல், நீர்மோர், தர்ப்பூசணி வழங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை தமிழகம்  முழுவதும் 1000 இடங்களில் ORS பாக்கெட்கள் வழங்கும் “Rehydration Points” அமைக்கப்படும் என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி மாவட்ட வாரியாக  தலா 15 முதல் 25 மையங்கள் என தமிழகத்தில்  46  சுகாதார மாவட்டங்களிலும் 1000 மையங்களை ஏற்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 75 இடங்களில் ORS பாக்கெட்கள் வழங்கும் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த 1000 மையங்களும் ஜுன் மாதம் 30ம் தேதி வரை தினசரி செயல்பாட்டில் இருக்கும்  எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!