undefined

வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... ரோட் ஷோவில்  பிரசாந்த் கிஷோர் காயம்.!

 
 


 
பீகார் மாநிலத்தில் ஆராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர்  கலந்து கொண்டார். ‘பீகார் பத்லாவ் யாத்ரா’ என்ற பிரச்சார ரோட் ஷோவில்  நேற்று ஜூலை 18ம் தேதி படுகாயமடைந்தார்.

ரோட் ஷோவில்  ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஒரு பெண்ணுக்கு உதவ முயன்றபோது பிரசாந்த் கிஷோர் படுகாயம் அடைந்தார். அவர் ஒரு கூட்டத்தின் வழியாக நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக ஒரு வாகனம் மோதியதில் காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டவுடன் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் மருத்துவசிகிச்சை பெற்று வருகிறார். ஜன் சுராஜ் கட்சி இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அவரது உடல்நிலை  சீராக உள்ளது. கிஷோரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த கட்சி, அவரது பிரச்சார நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளது.

பிரசாந்த் கிஷோர், முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். தற்போது ஜன் சுராஜ் கட்சியின் மூலம் பீகார் மாநிலத்தில் 2025 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து 243 தொகுதிகளிலும் போட்டியிட தயாராகி வருகிறார். இந்த ரோட் ஷோ, அவரது ‘பீகார் பத்லாவ் யாத்ரா’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?