எடப்பாடியின் ”உருட்டுகளும் திருட்டுகளும்” புதிய பிரச்சாரம்!
2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவுக்கு எதிராக ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற புதிய பிரச்சார உத்தியை அதிமுக எடப்பாடி கையில் எடுத்துள்ளார். தேர்தலில் திமுக அரசு அளித்த பொய் வாக்குறுதிகளை மையப்படுத்தி பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.இந்த பிரச்சாரம் முதன்முதலாக புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இது, அவர் மேற்கொண்ட மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், ஆளும் திமுக அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும், அவர்களின் ஆட்சியில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளையும் மக்களிடையே வீடு வீடாகச் சென்று வெளிப்படுத்துவதாகும். இது குறித்து புதுக்கோட்டையில் ”அதிமுகவில் ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கை முடிந்துவிட்டது. திமுகவில் தான் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கிறார்கள்.
திமுக ஆட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு மரியாதை இல்லை. நேர்மையானவர்களை திமுக அரசு சஸ்பெண்ட் செய்கிறது. தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திப்பதற்கான நேரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 தேதிகளில் தூத்துக்குடி, திருச்செந்தூர், மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான பிரச்சார இலச்சினையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னதாக வெளியிட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!