சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல பூஜை மற்​றும் மகர​விளக்கு பூஜைக்கு சென்று திரும்​பும் பக்​தர்​கள் வசதிக்காக, காக்​கி​நாடா - கோட்​ட​யம் சிறப்பு ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்​கள் இயக்​கப்பட உள்​ளன.

இதன்​படி, காக்​கி​நாடா டவுணில் இருந்து நவ.17, டிச.1, 8, 15, 22, 29, ஜன.5, 12, 19 ஆகிய தேதி​களில் வாராந்​திர சிறப்பு ரயில் (07109) இயக்கப்படும்.

மறு​மார்க்​க​மாக, கோட்​ட​யத்​தில் இருந்து நவ.18, டிச.2, 9, 16, 23, 30, ஜன.6, 13, 20 ஆகிய தேதி​களில் வாராந்​திர சிறப்பு ரயில் (07110) இயக்கப்படும். இந்த ரயில்​கள் காட்​பாடி, ஜோலார்​பேட்​டை, சேலம், ஈரோடு, திருப்​பூர், போத்​தனூர் வழி​யாக இயக்​கப்​படும். மகா​ராஷ்டிரா ஹசூர் சாஹிப் நாந்​தேட்- கொல்​லம் இடையே ஒரு சிறப்பு ரயிலும், தெலுங்​கானா சார்​லபள்ளி - கொல்​லம் இடையே ஒரு சிறப்பு ரயிலும் இயக்​கப்பட உள்​ளதாக தெற்கு ரயில்வே செய்​திக்​குறிப்​பில்​ தெரிவித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!