undefined

சுட்டெரித்த வெயில்.. தாங்கமுடியாத வெப்பத்தால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சரோஜ் மாலிக் (வயது 35). இவர் தனது மனைவி சபிதா மாலிக் (28) மற்றும் 2 குழந்தைகளுடன் ஈரோடு சூரம்பட்டி கோவலன் வீதியில் கடந்த 5 மாதங்களாக தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். சபிதா மாலிக் அதே பகுதியில் உள்ள தனியார் லுங்கி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஈரோட்டின் கொளுத்தும் வெயிலை அவரால் தாங்க முடியவில்லை. அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் சபீதா மாலிக் தனது கணவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். கொஞ்ச நாள் காத்திருந்து ஊருக்குப் போலாம் என கூறியுள்ளார். ஆனால், கடும் வெயிலின் காரணமாக சபீதா மாலிக்கால் ஈரோட்டில் தங்க முடியவில்லை.  சம்பவத்தன்று இரவு சரோஜ் மாலிக் வீட்டிற்கு வந்தபோது, வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அவரது மனைவி புடவையை கட்டி  தூக்கில் தொங்கினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சபிதா மாலிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு சூரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!