undefined

சேவைக் குறைபாடு... ரூ.50,422 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

 

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு தனியார் நிதி நிறுவனம் ரூ.50,422 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் குரங்கனியைச் சார்ந்த முத்துக்குமார் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். தவணை தொகையினை தவறாமல் செலுத்தி கடன் பாக்கி தொகை முழுமையும் செலுத்தி முடித்துள்ளார். ஆனால் அதன் பின்னரும் மூன்று மாதங்களுக்கு அதிகப்படியாக தவணை தொகையினை பிடித்துள்ளனர். ஆகவே அதிகப்படியாக பிடித்தம் செய்த தொகையை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். 

ஆனால் நிதி நிறுவனம் சரியான காரணங்களைக் கூறாமல் மறுத்துள்ளது. இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆணைய தலைவர் வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் அதிகப்படியாக வசூலித்த ரூ.25,422 சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.15,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.50,422 ஐ ஆறு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!