undefined

கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி... மூளையைத் தின்னும் அமீபாவால் குழந்தை உட்பட 2 பேர் பலி!

 

கேரள மாநிலத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா  எனும் அமீபிக் மூளைக்காய்ச்சல்  என்ற அரிய வகை தொற்று பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கேரளத்தில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்ட் 4 ம் தேதி 3 மாத குழந்தைக்கு இந்த அமீபா பாதிப்பு இருப்பது முதலில் கண்டறியப்பட்ட நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்ததாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 52 வயது ராம்லா என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தற்போது இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் கோழிக்கோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே  தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி உயிரிழந்தார்.  சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து மூளையை தின்கிறது.  

சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழையலாம். இவை நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் போன்ற அறிகுறிகள்  ஏற்படலாம்.  உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிடில் உயிரிழப்புக்கு அதிக வாய்ப்புள்ளது.  இந்த அமீபா நன்னீரில் மட்டுமே உயிர் வாழ்கிறது,  குளிக்கும்போது அதாவது மூக்கின் வழியாக மட்டுமே பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?