undefined

 அதிர்ச்சி... சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தார்!

 
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இந்தியா, ஆஸ்திரேலியா இடையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து, இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் இருந்த போது, மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

காபாவில் துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அடிக்கடி மழை குறுக்கீடு இருந்தது. 2வது நாள் ஆட்டம் மட்டுமே முழுமையாக நடைபெற்றது. மற்ற நாள் ஆட்டங்கள் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டதால், ஆட்டம் ரத்தானது.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎலில் தொடர்ந்து விளையாடுவார்.

38 வயதாகும் அஸ்வின் இதுவரை மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 537 விக்கெட்களையும், 3503 ரன்களையும் எடுத்து, பெஸ்ட் ஆல்ரவுண்டராக திகழந்தார். 2014 முதல் 2019ஆம் ஆண்டுவரை, டெஸ்டில் தொடர்ந்து மேட்ச் வின்னராக அஸ்வின் இருந்த நிலையில், அடுத்து டெஸ்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன்பிறகு, அஸ்வின் மீண்டும் தேவைப்பட்டதால், மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பினார்.

அஸ்வின், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார். இந்திய டெஸ்ட் அணியில் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கும் நிலையில் அஸ்வினுக்கு மாற்றாக மூன்றாவது ஸ்பின்னராக அக்சர் படேலை அணிக்குள் கொண்டு வர அதிக வாய்ப்புள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!