அதிர்ச்சி.. தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து.. 11பேர் உடல் கருகி பலியான சோகம்!

 

பிரேசிலின் போர்டோ அலெக்ரே நகரில் கரோயா புளூஸ்டா என்ற தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. தற்போது இந்த விடுதியில் வீடற்ற ஏழை எளிய மக்கள் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விடுதியில் தங்கியிருந்த 11 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டது அடையாளம் காண முடியவில்லை.

இதனால், அவர்களின் உடல்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து ரியோ கிராண்டே டோ சுல் கவர்னர் எடுவார்டோ லெய்டே இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!