அதிர்ச்சி.. பெரும் சோகம்... சிறப்பு காவலர் தூக்கிட்டு தற்கொலை!

 

ஆவடியில் சிறப்பு காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி 5வது பட்டாலியன் சிறப்பு காவல் படை காவலராக ஜார்ஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். சில தினங்களாக குடும்பத்தில் மோதல் போக்காக இருந்து வந்துள்ளது. 

இதனால் மன உளைச்சலில் இருந்த  சிறப்பு காவல் படை காவலர் ஜார்ஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காவலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில்  குடும்ப தகராறு காரணமாக ஜார்ஜ் தனது வீட்டில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!