தந்தை தற்கொலை செய்ததை செல்போனில் வீடியோ எடுத்த  மகன்!! பகீர் வாக்குமூலம் !

 

ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் உள்ள சிலக்கலபவி பகுதியில் ஷேக் ஜமால் என்பவர் மனைவி, மற்றும் தனது 3 மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். அவரது குடும்பத்தில் சிறு தகராறு இருந்ததாகவும், அதனால் மனஉளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்தாண்டு அவரின் தந்தை உயிரிழந்ததில் இருந்து ஷேக் ஜமால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், ஷேக் ஜமால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது நான்கு வயது மகன் எவ்வித தடுப்பு முயற்சியும் எடுக்காமல், உறவினர்களை கூப்பிடாமல் ஏன் சத்தம்கூட போடவில்லை. மாறாக தனது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்ததை முழுமையாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

உயிரிழந்தவரின் தங்கை காவல்துறையில் அளித்த புகாருக்கு பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அவரின் மனைவி குவைத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிரவைத்தது.

அதாவது, சம்பவம் நடந்த தினத்தன்று ஷேக் ஜமால் தனது மகனை அழைத்து, தான் தூக்கில் தொங்குவதை செல்போனில் படமாக்கும் படி கூறியுள்ளார். அவர் கூறியபடியே 4 வயது மகனும் தந்தை தற்கொலை செய்து கொள்வதை வீடியோ எடுத்துள்ளார். மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்