வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... ஓடும் ரயிலில் ஏறிய போது நிலைதடுமாறி ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் சிக்கிய பெண்... RPF வீரரின் துணிச்சலான செயல்!
நாக்பூர் ரயில் நிலையத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில், ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த பெண் ஒருவர், திடீரென சமநிலையை இழந்து நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழ இருந்த சமயத்தில் மிகச் சரியாக அருகில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர் தீரஜ் தலால் துரிதமாக ஓடி வந்து, அந்தப் பெண்ணை பிடித்து இழுத்து அவரது உயிரைக் காப்பாற்றினார். இந்த சம்பவம் RPF அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு ‘ஆபரேஷன் ஜீவன் ரக்ஷா’ திட்டத்தின் கீழ் நடைபெற்றது. சமூக வலைதளங்களில் இது வைரலாகி, RPF வீரரின் செயல் பெரிதும் பாராட்டப்பட்டு உள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஓடும் ரயிலில் ஏறுவதை தவிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!