undefined

பகீர் சிசிடிவி காட்சிகள்... ஓசியில பைக்கை ரிப்பேர் செய்து தரல... மெக்கானிக் மீது எஸ்ஐ கொடூரத் தாக்குதல்!  

 
 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வசித்து வருபவர் 31 வயது  சீனிவாசன்.இவர்  இவர் வாடிப்பட்டியில் ராயல் என்பீல்டு பைக் பழுதுபார்க்கும் நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து  வந்த அண்ணாதுரை சீனிவாசன் வைத்திருக்கும் ஒர்க்ஷாப்பில் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கை பழுது பார்க்க கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.  அதற்கான வேலை கூலி பொருட்கள் வாங்கும் பணத்தை தர மறுத்துள்ளார்.  தொடர்ந்து வாகனங்களை பழுது பார்க்க சொல்வதும்  அதற்கான பணம் ரூபாய்.8,600 கொடுக்காமல் இலவசமாக எடுத்துச் சென்றதாகவும்  கூறப்படுகிறது. 


இது குறித்த  சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சீனிவாசன் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், முதல்வர் தனிப்பிரிவு மனித உரிமை கழக ஆணையம் என பல்வேறு துறைக்கு புகார் மனு அளித்து உதவி ஆய்வாளர் அண்ணா துரையின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை இலவசமாக பழுது நீக்கித் தருமாறு கூறி ஒர்க்க்ஷாப் உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!