undefined

லீவு முடிந்து ஊர் திரும்ப வசதியாக நெல்லை - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

 

மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பலரும் சொந்த ஊர் சென்றுள்ள நிலையில், விடுமுறை முடிந்து மீண்டும் பணியிடங்களுக்கு திரும்ப வசதியாக  நெல்லையில் இருந்து பெங்களூரு வரை அம்பை, சிவகாசி வழியாக  சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரயில் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ரெயில் வருகிற 17ம் தேதி மாலை 4.20 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், வழியாக மறுநாள் ஆகஸ்ட் 18ம் தேதி மதியம் 12.20 மணிக்கு பெங்களூரு சென்றடையும். பின்னர் அங்கிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு 19-ந்தேதி காலை 6 மணிக்கு சிவகாசி வருகிறது. பின்னர் ராஜபாளையம், சங்கரன்கோவில் வழியாக காலை 10.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சிவகாசி வழியாக பெங்களூருவுக்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று சிவகாசி பகுதி தீப்பெட்டி, பட்டாசு, அச்சக அதிபர்கள் மற்றும் ரயில் பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தற்போது தென்னக ரயில்வே நிர்வாகம் இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்க அறிவித்துள்ளது. இதனை இப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து சாத்தூர், விருதுநகர் வழியாக பெங்களூரு செல்லும் ரயிலை தான் இந்த மாவட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தினர். இந்த ரெயிலில் போதிய இருக்கைகள் கிடைக்காமல் அவதியடைந்து வந்த நிலையில் இந்த சிறப்பு ரயில் அறிவிப்பு இப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த ரயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?