நெல்லை - கர்நாடகா இடையே நாளை சிறப்பு ரயில்... பணியிடம் திரும்புபவர்கள் பயன்படுத்திக்கோங்க!
தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பவர்கள், விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு திரும்பும் போது, கூட்ட நெரிசலை குறைக்க நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாளை நெல்லை - ஷிமோகா டவுன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (ரயில் எண். 06103) மாலை 4.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.00 மணிக்கு கர்நாடகாவின் ஷிமோகா டவுனை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ஷிமோகா டவுன் - நெல்லை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (ரயில் எண். 06104) ஆகஸ்ட் 18, 2025 (திங்கள்) அன்று பிற்பகல் 2.20 மணிக்கு ஷிமோகா டவுனில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்
நெல்லை, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கிழக்கடையம், பாவூர்ச்சுத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, தும்கூர், அர்சிகெரே, பிரூர், தரிகெரே, பத்ராவதி, ஷிமோகா நகரம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!