கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை... பர்த்டே பார்ட்டி கொண்டாடி விட்டு துயரம்!
ஹரியானா மாநிலத்தில், தோழியின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துக் கொண்டு விட்டு, பல்கலைக்கழக விடுதி அறைக்கு திரும்பிய 3ம் ஆண்டு மாணவி பூமிகா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம், குருகிராமில், தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பூமிகா (23) பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். பூமிகா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்தபடியே தினமும் கல்லூரி வகுப்புகளுக்கு சென்று பயின்று வந்தார்.
இந்நிலையில் விடுதியில் நேற்று முன் தினம் இரவு மற்றொரு மாணவியின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பூமிகா, அதன்பின்னர் விடுதியில் தனது அறைக்கு திரும்பிய நிலையில், அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூமிகா தனது அறைக்கு சென்று வெகுநேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் பூமிகாவின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அறை கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த மாணவிகள் இது குறித்து விடுதி காப்பாளரிடம் கூறினர். விரைந்து சென்ற விடுதி காப்பாளர், பூமிகாவின் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பூமிகா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் விரைந்து சென்ற போலீசார், பூமிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, பூமிகாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?
எதற்கும் தற்கொலை தீர்வாகாது. நிமிஷ நேர படபடப்பை தவிர்த்திடுங்க. உங்கள் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்க. தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுங்க.