தமிழ்நாட்டில் ஆகஸ்ட்டில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு.... வெதர்மேன் கருத்துக்கணிப்பு!
ஜூன் 1ம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 மாத காலமாக 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 6 சதவீதம் குறைவு ஆகும். தமிழ்நாட்டில் பெரும்பாலான நாட்களின் வெப்பமான சூழ்நிலையே அதிகம் நிலவியதால், மழைப் பதிவு குறைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அந்த வகையில் அடுத்த மாதம் முதல் 2 வாரங்கள் வெப்பச்சலன மழை தீவிரமாக இருக்கும் என்றும், 3ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான இடைபட்ட காலத்தில் வடகடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பதிவாகக் கூடும் என வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட பகுதிகள், கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் எனவும், ஒட்டுமொத்தத்தில் அடுத்த மாதம் இயல்பைவிட அதிக மழையும், இயல்பான வெப்பமும் தமிழ்நாட்டில் பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!