சிறுமியை கடத்தி திருமணம் செய்த வழக்கு.. இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் திருப்பதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற புலியூர் சித்தன் (வயது 21). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தார். பின்னர் சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். புகாரின் பேரில், ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார், பிரகாசை கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பிரகாஷுக்கு மொத்தம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். எனினும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
மேலும் அவருக்கு ரூ.31 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!