நாடே எதிர்பார்ப்பு... நாளை துவங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!
நாடே எதிர்பார்த்திருக்கிறது. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நாளை ஜூலை 22ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் வேகமெடுக்க துவங்கியுள்ளன.
முன்னதாக அல்வா தயாரிக்கும் சம்பிரதாய பணிகள் நடைபெற்ற நிலையில், ஊழியர்கள் முழு வேகத்தில் பட்ஜெட் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்ததும் புதிய சாதனை ஒன்றைப் படைக்க இருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்கிற சாதனைக்கும் சொந்தக்காரராகிறார்.
பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி மத்திய பொது பட்ஜெட் 23 ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மோடி 3வது முறை பிரதமராக பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!