வைரல் வீடியோ... தீவிபத்து நடந்த வீட்டின் கதவை உடைத்து 6 பேரை காப்பாற்றிய காவலர்...!
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஒன்று பஞ்சகுட்டா. இங்கு அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் 6வது தளத்தில் இன்று காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.இந்த தீவிபத்தில் 6 வது தளத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சிக்கிக் கொண்டனர். தீ மளமளவென பரவியதால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.
தைரியத்துடன் வீட்டினுள்ளே சென்று அங்கு சிக்கியிருந்த குடும்பத்தினர் 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!