மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

 
விளக்கு

மாதங்களில் அவள் மார்கழி என்றார் கண்ணதாசன். தை, ஆடி, புரட்டாசி, சித்திரை என்று எத்தனையோ விசேஷமான மாதங்கள் இருக்கும் போது ஏன் மார்கழியை பெண்ணுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் கவியரசர்? ஏனெனில் மார்கழி  மாதம் என்பது பீடை  மாதம் கிடையாது. நிறைய பேர் தவறாக புரிந்து வைத்திருக்கிறோம். பீடு உடைகிற மாதம் மார்கழி. பீடு உடைவதால் அதன் பின் வரும் வெளிச்சம் தான்  தை. அதனால் தான் தை பிறந்தால் வழி பிறக்கிறது. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கீதையில் ஶ்ரீகிருஷ்ணர் கூறியிருக்கிறார்.

மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கான அதிகாலை பொழுதாகும். மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பர்.. தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை உத்ராயண புண்ணிய காலமாகும். அதாவது தேவர்கள் விழித்திருக்கும் காலம். எனவே மார்கழி என்பது தேவர்களுக்கு வைகறை பொழுதைப் போன்றது. மிகவும் சிறப்புடைய மாதம் மார்கழி. எனவே இந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு உகந்தது!

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழியைத் ‘தனுர் மாதம்’ எனவும் அழைப்பர். இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது மக்களின் வழக்கம். ஓசோன் படலமானது பூமிக்கு மிக அருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாட்டைப் பக்தர்கள் இம்மாதத்தில் மேற்கொள்ளுகின்றனர்.

Kolam

இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் ‘என்றும் பதினாறு வயது’ எனச் சிவபெருமானிடமிருந்து வரத்தைப் பெற்ற மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. மிருத்யுஞ்ச ஹோமம் (யமனைவெல்லும் வேள்வி) செய்ய இம்மாதம் சிறந்தது.

மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, அனும ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை

மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து விடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து, குளித்து, கோலமிட்டு, திருப்பாவை, திருவெண்பாவை பாடல்களைப் பாட வேண்டும். மார்கழி மாதம் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும். மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் அழகான வண்ணக் கோலங்கள் போட்டால், லட்சுமி கடாட்சம் நிச்சயமாக கிடைக்கும். ஆண்டாள், பெருமாள் படங்களை வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். அதிகாலையில் எழுந்து விளக்கேற்றி இறைவனை வழிபட மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

உஷார்!! மார்கழி மாசத்துல செய்யவே கூடாத 4 தவறுகள் இது தான்!!

மார்கழி மாதத்தில் செய்யக்கூடாதவை

மார்கழி மாதத்தில் விதை விதைக்க கூடாது. ஏனெனில் பனிக்காலங்களில் விதைகள் சரியாக முளைக்காது. மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது. மார்கழி மாதம் விரதம் மேற்கொள்ளும் கன்னிப்பெண்கள் நெய், பால் சேர்த்த உணவைச் சாப்பிடக்கூடாது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web