undefined

பகீர் வீடியோ... வந்தே பாரத் ரயிலில்... நூலிழையில் உயிர் தப்பியவர்!

 

தீபாவளியை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.  அந்த வகையில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்  கேரளா திரூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்வு குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், முதியவர் ஒருவர் திரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்கிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்ததால்   பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள்  அவரை வரவேண்டாம் என கத்தில் கூச்சலிட்டனர். ஆனால் அவர் கேட்காமல் நடந்து கொண்டே இருந்தார். இதனால் பிளாட்பாரத்தில் இருந்தவர்கள்  திகிலின் உச்சத்திற்கு  சென்றுவிட்டனர்.

 

இருப்பினும் அவரை பலர் வசை பாடினர்.  உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு நடக்கக்கூடாது என பலரும் அறிவுரை கூறத் தொடங்கிவிட்டனர்.  
இந்த நிகழ்வை அங்கிருந்த பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  இவர்   ஒட்டப்பாலத்தில் வசித்து வருபவர்  எனத்  தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் குறித்த விவரங்களை ரயில்வே போலீஸார் சேகரித்து வரும் நிலையில், விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!