பள்ளத்தில் பாய்ந்த பள்ளிப்பேருந்து... கதறி கூச்சலிட்ட மாணவிகள்...  வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!  

 


கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில்  பாலகெரே-பனத்தூர் சாலையில் நேற்று  காலை சுமார் 20 குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து சாலையில் ஏற்பட்டிருந்த ஆழமான பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இந்தப் பேருந்து மிதமான வேகத்தில் சென்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் அவசர வெளியேற்ற வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்த  காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியில், மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் ஒரு சக்கரம் சிக்கி, பேருந்து ஒரு பக்கம் ஆபத்தான முறையில் சரியும்  காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு, சில மாணவர்கள் வேறொரு பேருந்தில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  


 கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “பெங்களூரு நகரில் சுமார் 10,000 பள்ளங்கள் உள்ளன” எனக் கூறியிருந்தார். இந்தியாவின் ஐ.டி. தலைநகரின் சாலைகள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்பதைக் காட்சிப்படுத்துகிறது. இந்தப் பள்ளங்கள் பசுமையாக இல்லாமல், பெரும்பாலான விபத்துகளுக்கும் காரணமாகின்றன. சில சமயங்களில் பயணிகள் உயிரிழப்பும் ஏற்படுகிறது.  கூலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், 44 வயதான மங்களூரு பெண் ஒருவர், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது  பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து, பின்னர் ஓடிக்கொண்டிருந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?