undefined

பகீர் வீடியோ... கார் சக்கரத்தில் சிக்கிய 2 வயது குழந்தை... கவனக்குறைவால் சொந்த பேரனைக் கொன்ற தாத்தா!

 

வெளியே சென்று விட்டு, வீட்டிற்குள் காரை நிறுத்துவதற்கு முயற்சித்த தாத்தா, தன்னையறியாமல், தனது சொந்த பேரனை கார் ஏற்றி கொன்ற சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், காசர்கோடில் கடந்த நவம்பர் 10ம் தேதி, தனது வீட்டின் வெளியே 5 வயது மதிக்கத்தக்க சிறுவனும், 2 வயது நிரம்பிய அவனது தம்பியும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது,, வெளியே காரில் சென்றிருந்த அந்த குழந்தைகளின் தாத்தா, கார் ஓட்டியபடியே வீட்டிற்குள் நுழைகிறார்.

<a href=https://youtube.com/embed/xUqDVNTg_po?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/xUqDVNTg_po/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

தாத்தா கார் ஓட்டி வருவதைப் பார்த்த அவரின் 5 வயது சிறுவன், தனது தாத்தா, காரை நிறுத்துவதற்கு வசதியாக கார் பார்க்கிங்கில் இருந்த தனது சைக்கிளை ஓரமாக எடுத்து நிறுத்தினான். அப்போது, 2 வயது குழந்தை காரின் முன்னால் போய் நின்றுள்ளது. இதனை அறியாத முதியவர் காரை முன்னாள் எடுக்க முயற்சிக்க. குழந்தை காரின் முன் சக்கரத்தில் மாட்டி நசுங்கியது.

இதனைக் கண்ட 5 வயது சிறுவன் அலறியபடி ஓட, முதியவரும் காரில் இருந்து இறங்கி ஓடி வந்தார். அங்கு குழந்தை மூச்சு, பேச்சற்று இருந்துள்ளது. உடனடியாக குழந்தையை மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பேரக்குழந்தையை தாத்தாவே தவறுதலாக கார் ஏற்றிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!