தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் நேற்று திடீரென கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவில் கடந்த 2024-ம் ஆண்டு வகுப்பு நேரம் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இருந்தது. தற்போது மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த திடீரென வகுப்பு நேரம் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் பழைய நேரப்படி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட தலைவர் மாடசாமி தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!