undefined

இன்று தை அமாவாசை... இந்த தவறை மட்டும் செஞ்சுடாதீங்க.. பித்ரு தோஷம் ஏற்படும்!

 

இன்று தை அமாவாசை. ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் தவறாமல் தர்ப்பணம் கொடுத்து வருகிறேன். ஆனாலும் பித்ரு சாபமும் தோஷமும் இருக்கிறது என்கிறீர்களா? அமாவாசை தினங்களில் இந்த தவறுகளை எல்லாம் மறந்தும் செய்யாதீங்க. பொதுவாகவே அமாவாசை தினம் என்பது நமது முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த மிக முக்கியமான நாள். 

தை அமாவாசை தினத்தில் தான் சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. சூரியன் 'பிதுர்க்காரகன்' (தந்தை வழி) என்பதால், இந்த தை அமாவாசை தினத்தில் செய்யப்படும் வழிபாடு பல தலைமுறைக்கும் நன்மையைத் தரும். "தெய்வத்தை விட முன்னோர்களின் ஆசி வலிமையானது" என்பார்கள். எனவே, இந்த நாளில் தவறாமல் முன்னோர்களை நினைத்து வழிபடுங்கள்.

இன்று ஜனவரி 18ம் தேதி அதிகாலை 12:03 மணிக்கு அமாவாசை திதி தொடங்குகிறது. நாளை ஜனவரி 19ம் தேதி அதிகாலை 1:21 மணிக்கு அமாவாசை திதி முடிவடைகிறது. எனவே இன்று அதிகாலை முதல் மாலை வரை தாராளமாக முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கலாம்.

அமாவாசை வழிபாட்டில் இந்த தவறை மட்டும் செய்யவே செய்யாதீங்க. இந்த தவறுகளால் நீங்கள் பித்ருக்களின் சாபத்திற்கும் ஆளாக நேரிடலாம். இதனைத் தான் பித்ரு தோஷம் என்கிறார்கள். அப்படி பித்ரு தோஷம் ஏற்பட்டால் அது நமது சந்ததியினரையும் பாதிக்கும். பொதுவாக மாதந்தோறும் அமாவாசை திதி வரும் என்றாலும் 3 அமாவாசைகள் சிறப்பு வாய்ந்தவை.

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை  என இந்த 3 அமாவாசை தினங்களும் முக்கியமானவை. அதனால் அமாவாசை தினத்தில் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலமிடலாம். முன்னோர்களின் புகைப்படங்களுக்கு பூ சாற்றுவதைத் தவிர்த்து இந்த அமாவாசை தினங்களில் துளசி சாற்ற வேண்டும். 

அமாவாசை தினத்தில் கடன் கொடுக்க கூடாது

வீட்டு வாசல், பூஜை அறையில் கோலம் போடக்கூடாது. வெறுமனே தண்ணீர் தெளித்து விட்டால் போதுமானது.

முன்னோர்களை வழிபட்டு படையல் இட வேண்டும். காகத்திற்கு கட்டாயம் சோறு வைக்க வேண்டும். 

அசைவ உணவுகளை எக்காரணம் கொண்டும் சமைக்க, உண்ணக்கூடாது. 

முன்னோர்கள் வீட்டுக்கு வரும் தினம். அவர்களை வரவேற்கும் வகையில் வீடு வாசல் சுத்தம் செய்ய வேண்டும். தலைமுடி, நகம் வெட்டக் கூடாது. 


சாப்பிடுவதற்கு முன்னர் மூதாதையருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும். முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். அல்லது உணவு படைக்கும் வரை சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதானை செய்து பின்னர் சாப்பிடலாம்.காகம் என்பது முன்னோர்களின் அம்சமாகக் கருதப்படுகிறது.

எனவே வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் முன்பு, உணவை காகத்துக்கு படைக்க வேண்டும். சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைப்பது சிறப்பு. காகங்கள் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் சாப்பிட வந்திருப்பதாக ஐதீகம்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!