இன்று மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்!

 

இன்று ஆகஸ்ட்  27ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுவிடுமுறை நாள் என்பதால் சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் மின்சார ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய விடுமுறையை முன்னிட்டு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி அனைத்து புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

அதன்படி, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு  வழித்தடங்களில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?