குற்றாலம் மெயின் அருவியில் 7 நாட்களுக்குப் பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 7 நாட்களாக குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
விடுமுறை நாட்களிலும் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படாததால் அதிருப்திக்குள்ளாகி ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் அருவிகளில் நீர் வரத்து சரியான நிலையில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயில் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அருவிகளில் நீர்வரத்து சீரானதை அடுத்து குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உற்சாகமுடன் பயணிகள் குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!