ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

 

கேரள மாநிலத்தில் 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில்  கபினி அணைக்கு  20,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு காரணமாக  25,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அருவிகளில் பரிசல்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது