undefined

பெரும் பரபரப்பு... நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொலை!

 

 திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில், இன்று காலை கீழநத்தம் பகுதியில் வசித்து வரும்  மாயாண்டி வழக்கு விசாரணைக்காக  ஆஜராக வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாயாண்டியை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கும்பலிடம் இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடினார்.

இருப்பினும் அந்த கும்பல் விடாமல் மாயாண்டியை துரத்தி சென்றது.  நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வாசலுக்கு வந்தபோது மாயாண்டியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு ஓடி விட்டது. இந்த பயங்கர தாக்குதலில் நிலைகுலைந்த மாயண்டியின்  முகம், கை, கால்  என பல  இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.  இதனையடுத்து மாயாண்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே  சரிந்து துடிதுடித்து விழுந்து உயிரிழந்தார். அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் ஒருவரை 4 பேர் வெட்டிக்கொலை செய்த பயங்கர சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!