வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை!

 
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை!


திருநெல்வேலி மாவட்டம் பாளை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் தெய்வநாயகம். இவருக்கு வயது47. இவர் தொழில் நிமித்தமாக சென்னை சென்றிருந்தார்.

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை!

வீட்டில் மீதமிருந்த இவரது குடும்பத்தினரும் உறவினர் வீட்டுக்குசென்று விட்ட நிலையில் மர்ம நபர்கள் வீட்டை கொள்ளையடித்துள்ளனர் . வீட்டின் கதவு, பீரோ ஆகியவற்றை உடைத்து அங்கிருந்த வளையல்கள், கம்மல்கள், மோதிரம் உட்பட 5 பவுன் தங்க நகைகளையும் , வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை!

வீடு திரும்பிய தெய்வநாயகம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2,00,000/- என புகார் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் கைரேகைகளையும் ஆய்வு செய்து பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் தப்பி ஓடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

From around the web