பதற வைக்கும் வீடியோ... சிறுமியை விரட்டி விரட்டி கடிக்கும் நாய்கள்!
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று தெருநாய்கள் ஒன்று வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாக்கின. படுகாயமடைந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.
#CaughtOnCamera: Pack Of Dogs Chase, Maul Child In UP's #Amroha
— Mirror Now (@MirrorNow) March 9, 2024
5 year old dragged, attacked by strays
Young girl hospitalised, traumatised#UttarPradesh | @SnehaMKoshy pic.twitter.com/cTQKpC6w22
சிறுமி தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமி வீட்டின் வாசலில் இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அம்ரோஹா, சிட்டி நகர் கோட்வாலி பகுதியில், கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்து தெரு நாய்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வெளியே செல்லவே அப்பகுதி மக்கள் அச்சம் கொள்கிறார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!