பகீர்... கல்லூரிக்குள் நுழைந்து... 3 மாணவிகளின் மீது ஆசிட் வீச்சு... மாணவன் வெறிச்செயல்!

 
ஆசிட்

வெறிப்பிடித்தவனாக, முகமூடி அணிந்தப்படி கல்லூரிக்குள் நுழைந்து, தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த 3 மாணவிகளின் மீதும் ஆசிட் ஊற்றி விட்டு தப்பிக்க முயன்ற கல்லூரி மாணவனைப் பொதுமக்களும், கல்லூரி ஊழியர்களும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடாபா அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று பியூசி என அழைக்கப்படும் கர்நாடக மாநில பல்கலைக்கழகத்திற்கு முந்தைய தேர்வுகள் துவங்கியது. இதையடுத்து கல்லூரியில் மாணவிகள் அனைவரும் காலை 10 மணியளவில் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது கல்லூரி வளாகத்திற்குள் முகமூடியும், தலையில் தொப்பியும் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென அங்கிருந்த மூன்று மாணவிகள் மீது ஆசிட் வீசி உள்ளார்.

இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் அலினா, அர்ச்சனா மற்றும் அமிர்தா ஆகிய 3 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். மூவரும் அலறித் துடித்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவிகள் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபரை கல்லூரி பணியாளர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆசிட் வீசிய நபரின் பெயர் அபின் (23) என்பதும், அவர் அண்டை மாநிலமான கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

ஆசிட்

அவர் எதற்காக மாணவிகள் மீது ஆசிட் வீசினார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அபின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்பிஏ பயின்று வந்துள்ளார். மேலும் ஆசிட் வீச்சு சம்பவத்தில் காயமடைந்த அலினாவும், அபினும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாணவிகள் 3 பேர் மீது கல்லூரி மாணவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web