பரபரப்பு... பிறந்து 20 நாட்களேயான குழந்தை விற்பனை... குழந்தைகளை கடத்தும் 10 பேர் கைது!
பெற்றோர்களே... உஷாராக இருங்க. பெங்களூருவில் குழந்தைகள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர்களில் 9 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை கூட்டியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களுருவில் குழந்தைகளைக் கடத்தி செல்லும் கும்பலைப் பிடிக்க மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், குழந்தைகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ரம்யா என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே மகாலட்சுமி, ராதா, சுஹாசினி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் மூலம் கைது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த நவம்பர் 24ம் தேதியன்று மேற்கு பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் குழந்தை இல்லாத தம்பதிக்கு பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்க இருந்த நிலையில் மூன்று பெண்களும், கார் ஓட்டுநரும் பிடிபட்டனர்.
குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரில் 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மகாலட்சுமி என்பவர் மட்டும் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
இந்த குழந்தைக் கடத்தல் வழக்கில் சில மருத்துவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட பெண்கள் பலர், சோதனைக் கருத்தரிப்பிற்கான முகவர்களாக பணிபுரிந்துள்னர். வாடகைத்தாய் சட்டத்தின் விதிகள் கடுமையாகப்பட்டதால், அவர்கள் வேலையில் இருந்து விலகியுள்ளனர். இதன் பின் இவர்கள் குழந்தைகள் கடத்தும் கும்பலாக மாறியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!