அதிர்ச்சி... 7ம் வகுப்பு மாணவி 6 மாத கர்ப்பம்... கதறும் பெற்றோர்!

 
கர்ப்பம்

இந்தியாவில் சமீப காலமாக சிறுமிகள், பெண்கள் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்து வருவது நாட்டு மக்களிடையே பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. அந்த வகையில்,  கர்நாடகாவில் 7-ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரைச் சேர்ந்த 7ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி தனது உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிக்கபள்ளாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச மகளிர் தினத்தன்று 7ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு 6 மாத கர்ப்பிணியாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web