3 நாட்களில் திருமணம்... காதலன் வீட்டில் தூக்கில் தொங்கிய மணப்பெண்!

காதலித்தவனுடனே திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்னும் 3 தினங்களில் திருமணம் என்று ஊர் முழுக்க பத்திரிக்கை கொடுத்தாயிற்று. இந்நிலையில், காதலன் வீட்டில், தூக்கில் தொங்கி தற்கொலைச் செய்து கொண்டார் மணப்பெண். மர்ம மரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ர்கர்நாடகா மாநிலம் விஜயநகரத்தில் வசித்து வருபவர் அசோக்குமார். அஇதே ஊரில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் ஒன்றாக படித்ததுடன், புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். ஐஸ்வர்யா பட்டியல் இனத்தை சேர்ந்தவர். ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார் அசோக்குமார்.
ஆனால், அதற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதே போல, சாதி வேறுபாடு காரணமாக அசோக்குமார் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ முடியாது என ஐஸ்வர்யாவிடம் அவரது பெற்றோர் கூறிவந்தனர். ஆனால், அசோக்குமாரை தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதம் பிடித்து பெற்றோரிடம் சம்மதம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், அசோக்குமாருக்கும், ஐஸ்வர்யாவுக்கும நவம்பர் 23ம் தேதி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் ஐஸ்வர்யா கலந்து கொண்டார். இந்நிலையில் அசோக்குமார் வீட்டில் ஐஸ்வர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை சுப்பிரமணிக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யாவின் தந்தை கதறித் துடித்தார். சாதிப் பிரச்சினைக் காரணமாக தனது மகள் கொல்லப்பட்டதாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
ஐஸ்வர்யா பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது பெற்றோர் உட்பட அவரது குடும்பத்தினர் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளக்கூடாது என மணமகன் குடும்பத்தினர் நிபந்தனை விதித்திருந்தனர். ஐஸ்வர்யாவின் ஆசை நிராசையாகக் கூடாது என்பதற்காக அதை ஏற்ற அவரது பெற்றோர், மணமகன் வீட்டிற்கு அவரது மகளை மட்டும் அனுப்பிவிட்டனர்.
இந்நிலையில், திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன் திட்டமிட்டு ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்று முடிந்து 2 மணி நேரம் கழித்தே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஐஸ்வர்யாவின் தந்தை கூறியுள்ளர்.
எனது மகள் தற்கொலை செய்யும் அளவிற்கு பலவீனமானவள் கிடையாது என அவரது தந்தை கதறி துடித்தார். ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அசோக்குமாரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெற 3 நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!