பகீர்... காதலனின் செல்போனில் 13,000 நிர்வாணப் புகைப்படங்கள்... காதலி செய்த தரமான சம்பவம்!

 
பாலியல் வன்கொடுமை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தன்னுடைய காதலனின் செல்போனைப் பார்க்க நேரிட்ட காதலி அதிர்ச்சியடைந்தார். காதலனின் செல்போனில் பல்வேறு இளம்பெண்களின் 13,000 நிர்வாணப் புகைப்படங்கள் இருப்பதைக் கண்ட காதலி, உடனடியாக இது குறித்து புகாரளித்துள்ளார்.

பெங்களூரு பெல்லந்துரில் உள்ள பிபிஓ நிறுவனம் ஒன்றில் ஆதித்யா சந்தோஷ்(25) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், கடந்த 4 மாதங்களாக தன்னுடன் பணியாற்றும் இளம்பெண் ஒருவருடன் பழகி வந்தார். பின்னர், இவர்களது பழக்கம் நட்பைத் தாண்டி காதலித்து வந்த நிலையில், இன்னும் நெருக்கமான நிலையில், தன்னுடைய காதலியை நிர்வாண நிலையில் சில புகைப்படங்களை சந்தோஷ் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அழிக்க வேண்டும் என்று வற்புறுத்திய காதலி, சந்தோஷின் செல்போனை வாங்கிப் பார்த்தவர் அதிர்ந்து போனார்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

சந்தோஷின் செல்போனில் பல இளம்பெண்களின் 13,000 நிர்வாணப் புகைப்படங்கள் இருந்துள்ளன. அந்த நிர்வாண புகைப்படங்களில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் சக பணியாளர்கள் பலரின் நிர்வாணப் புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காதலி, இது குறித்து அந்நிறுவனத்தின் மனித வளத்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து நிறுவனத்தின் சட்டத்துறை சார்பில் நவம்mபர் 23ம் தேதியன்று சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் சந்தோஷை கைது செய்ததுடன் அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாலியல் வன்கொடுமை

சந்தோஷின் செல்போனில் இருந்த புகைப்படங்களில் பெரும்பாலான புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களைப் பயன்படுத்தி அவர் மிரட்டினாரா என்பதை அறிய அவரது செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர்.

சந்தோஷ், செல்போன் கேலரியில் உள்ள பெரும்பாலான புகைப்படங்கள் அசல் புகைப்படங்களைப் போல் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 13,000 நிர்வாணப் புகைப்படங்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web