16,848 சதுர அடி... ரூ.50 லட்சம் மதிப்பு... பிரதீக் ஷா பங்களாவை மகளுக்கு கொடுத்தார் அமிதாப் பச்சன்!

 
ஸ்வேதா அமிதாப்

மும்பை ஜூஹூ கடற்கரை அருகே, தான் பார்த்து பார்த்து ரசித்து கட்டிய ரூ.50 லட்சம் மதிப்புடைய தனது பிரதீக்ஷா பங்களாவை, தன்னுடைய மகள் ஸ்வேதாவுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் அமிதாப். இரண்டு மனைகளுடன் கூடிய இந்த பங்களா 16,848 சதுர அடி கொண்டது.

அமிதாப் தற்போது வசித்து வரும் ஜல்சா வீட்டிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் பிரதீக்ஷா பங்களா அமைந்துள்ளது. அமிதாப் பச்சன் திரையுலகில் சம்பாதிக்க துவங்கி முதன் முதலாக வாங்கிய பங்களா பிரதீக்ஷா. அமிதாப் பச்சன் தற்போது நடத்தி வரும் ரியாலிட்டி ஷோவான கோன் பனேகா குரோர்பதியின் 14-வது சீசன் நிகழ்ச்சியின்போது, பிரதீக்ஷா வீட்டை மகளுக்கு வழங்கிய தகவலை தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் பேசும்போது, “பிரதீக்ஷா என்ற பெயர் எனது தந்தை சூட்டியது. அவரது கவிதையில் இந்த வார்த்தை வருகிறது” எனக் குறிப்பிட்டார். பாலிவுட் நடசத்திரங்களான ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் பிரதீக்ஷா வீட்டில் தான் திருமணம் நடைபெற்றது என்பதை மறந்துவிட இயலாது.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சனின் பிறந்த நாள் அன்று, பிரதீக்ஷா வீட்டில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது மகள் ஸ்வேதா பச்சன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அன்றைய தினத்தில் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட மற்றொரு புகைப்படத்தையும் பகிர்ந்து, 'நீங்கள் எப்போதும் எங்களை அன்பால் சூழ்ந்திருப்பீர்கள்' என குறிப்பிட்டிருந்தார் ஸ்வேதா.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web