கடவுள் ஆசிர்வாதம்! கர்ப்பமாக இருக்கும் போதே மீண்டும் கர்ப்பமான பெண்! அதிர்ந்த மருத்துவர்கள்!

 
கர்ப்பமாக இருக்கும் போதே கர்ப்பிணி பெண்

எத்தனை கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தாலும், குழந்தை செல்வத்திற்காக கோடிக்கணக்கான தம்பதியர் ஏங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். மருத்துவ உலகில் சில அதிசயங்கள் எப்போதேனும் அரிதாக நடக்கும். அப்படி, கருவுற்ற இளம்பெண் ஒருவர், கருவுற்றிருக்கும் போதே மீண்டும் கருவுற்ற அதிசயம் நிகழ்ந்தது. இரட்டைக் குழந்தைகளையும் ஆரோக்கியமாக பெற்றெடுத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் அவர். அமெரிக்காவில் காரா வின்ஹோல்ட் என்ற 30 வயதாகும் பெண் ஏற்கெனவே மூன்று முறை கருச்சிதைவுகளைச் சந்தித்து சோர்ந்து போயிருந்தார்.

இருந்தாலும் இந்த தம்பதியருக்கு மீண்டும் குழந்தை பெற்றெடுக்கும் ஆசை இருந்தது. ஒரு குழந்தை இருந்த நிலையில், துணிந்து இன்னொரு குழந்தை பெற்றெடுக்கலாம் என முடிவு செய்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காரா வின்ஹோல்ட் கர்ப்பமானார். 

பின்னர் கர்ப்பமாக இருப்பதனை மருத்துவ சோதனையிலும் உறுதி செய்து கொண்டார். அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து, மீண்டும் ஸ்கோன் செய்து பார்த்த போது, தான் மீண்டும் கருவுற்று இருப்பதை ஸ்கேன் மூலமாக அறிந்தார். இந்த தம்பதியர் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றனர்.

us-woman-becomes-pregnant-while-being-pregnant

ஏற்கெனவே கர்ப்பமாக இருக்கும் காலத்தில் மீண்டும் கர்ப்பம் ஏற்பட்டால், அது சூப்பர்ஃபெடேஷன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது, முதல் நாளுக்கு சில நாட்கள் அல்லது வாரங்களில் இது போன்று நிகழலாம். ஆனால், இது ரொம்பவும் அரிதான விஷயம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இறுதியாக, காரா வின்ஹோல்டுக்கு 6 நிமிட இடைவெளியில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. காரா வின்ஹோல்ட், தனக்கு நடந்தது ஒரு அதிசயம் என்று 100 சதவீதம் நம்புவதாக கூறியுள்ளார். வின்ஹோல்ட் மற்றும் அவரது கணவருக்கு 2018-ல் முதல் மகன் பிறந்தார். தம்பதியினர் குடும்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்த போது, ​​அவருக்கு 3 முறை கருச்சிதைவு ஏற்பட்டது.

கர்ப்பிணி பெண்

மீண்டும் கருவுற்றால் மீண்டும் கரு சிதைந்து விடுமோ என்று பயப்படும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஆனால், தைரியமாக மீண்டும் குழந்தையை பெற்றெடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்த போது அவருக்கு இப்போது இரட்டை குழந்தைகள் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இதை மருத்துவ உலகின் அதிசயமாக கருதுகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web