தங்கம் விலை அதிரடி உயர்வு! சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையானது.
சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக வெளியாகியுள்ளது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து, சவரனுக்கு ரூ.4,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலையில் எந்த மாற்றமில்லாமல், ரூ.67,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!