தொடர் மழை... வேகமெடுக்கும் டெங்கு.... இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்! மிஸ் பண்ணாதீங்க!

 
மருத்துவ முகாம்

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வந்தாலும், மழை நீர் தேங்கியுள்ளதால் மழைக்கால நோய்கள் பரவுவதும் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே டெங்குவால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. உங்கள் வீட்டின் அருகே செயல்படும் மருத்துவ முகாம்களில் பங்கேற்க மறக்காம உங்களோட ஆதார் அட்டையையும் எடுத்து செல்லுங்க.  வீட்டைச் சுற்றிலும், வீட்டினுள் தேவையில்லாத இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது.

முகாம்

எனவே, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்காக தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதம் வரை 1,000 சிறப்பு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்தது. இதனையடுத்து இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதனை சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாம்

உடல் நிலையில் சரியில்லாதவர்கள் மற்றும் மருத்துவ முகாமிற்கு வருபவர்கள் ஆதார் கட்டாயம் கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த மருத்துவ முகாம் மக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் கோரிக்கைவிடுத்தார்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web