மிக்ஜாம் புயல் பாதிப்பு... நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி!

 
சூர்யா கார்த்தி

சென்னையில் கோரத்தாண்டவமாடி புரட்டிப் போட்டு விட்டு கடந்துள்ளது மிக்ஜாம் புயல். இதுவரை கனமழையால் ஏழு பேர் பலியாகியுள்ள நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா- கார்த்தி இருவருமாக சேர்ந்து ரூ.10 லட்ச ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை.

'மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், கனமழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சூர்யா கார்த்தி

இந்நிலையில் நிதி மட்டுமின்றி தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நடிகர்கள் சூர்யா, கார்த்தி வழங்க உள்ளனர். இந்த செயல், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web