அமுக்கிரா கிழங்கு சாப்பிட்டா இத்தனை சக்தியா? இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

 
அமுக்கிரா கிழங்கு

அமுக்கிரா கிழங்கு சாப்பிட்டா இத்தனை சக்தியா என்று ஆச்சர்யப்படுவீர்கள். மன நலம், உடல் நலம் என இரண்டையும் சீராக வைத்துக்கொள்வதில் அமுக்கரா கிழங்கு பெருமளவு உதவுகிறது. இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து. பலகீனமான உடலுக்கு இது தெம்புதரும். இதய துடிப்பை சீராக்கும். மனஉளைச்சலில் இருந்து விடுதலைதரும். மூளை செல்களை தூண்டி அதிக புத்துணர்ச்சியை வழங்கும்.

Amukkura Kilangu

பலவீனமாக இருக்கும் உடலுக்கு இது தெம்பை கொடுக்கிறது. குதிரை பலத்தை கொடுக்கும். நீண்ட ஆயுளை பெறலாம். இது இடுப்பு வலிக்கு மருந்தாக பயன்படுத்தலாம். இந்த கிழங்கை இழைத்து வெந்நீருடன் கொதிக்க வைத்து போட்டால் வீக்கம் குறையும். உடல் எடையை குறைக்க உதவும். இந்த கிழங்கை பாலில் வேக வைத்து அதை கழுவி உலர்த்த வேண்டும்.

பின்னர் அதை பொடி செய்துவிட்டு காலை, மாலை பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி ஓடிவிடும். மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். இந்த அமுக்கிரா கிழங்கு விந்துக்களை பெருக்கும். ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளுக்கு அருமருந்தாக இருக்கும்.

Amukkura Kilangu

குழந்தை பேறு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனுடன் சாப்பிட்டால் குழந்தை உண்டாகும். உடல் எடை குறைய இந்த கிழங்கின் பொடியை 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். உடலில் உள்ள ஊளைச் சதையை குறைத்தாலும் உடல் சோர்வையாமல் ஊட்டச்சத்தை தக்க வைத்துக் கொள்ளும்.

அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடல் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் பெறலாம்.

அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து, பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, கண்டமாலை வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம்.

அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும்.

கிழங்கை பாலில் வேக வைத்து அலம்பி உலர்த்தி பின் பொடி செய்து, ஒரு வேளைக்கு 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வன்மை தரும்.

அமுக்கிரா கிழங்கு பொடி - 1 பங்கு, கற்கண்டு - 3 பங்கு என சேர்த்து, காலையும் மாலையும் பசுவின்பாலுடன் 4கிராம் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web