தொடர் மழை.. எகிறியது காற்கறிகள் விலை... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறி, பழங்களின் விலை ஒரேயடியாக கடுமையாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், டிச.5-ம் தேதி வரையிலும் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களில் காய்கறிகளின் விலை இன்னும் உச்சத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று ஒவ்வொரு காய்கறிகளும் என்னென்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்த பட்டியலைக் காணலாம்.

காய்கறி

அவரைக்காய் கிலோ 50 ரூபாய்க்கும், நெல்லிக்கனி 102 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 80 ரூபாய்க்கும், பீட்ரூட் 35 ரூபாய்க்கும், பாகற்காய் 40 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 10 ரூபாய்க்கும், குடைமிளகாய் 25 ரூபாய்க்கும், கேரட் 25 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் 30 ரூபாய்க்கும், கொத்தவரை 40 ரூபாய்க்கும், தேங்காய் 45 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்

முருங்கைக்காய் 90 ரூபாய்க்கும், பூண்டு 80 ரூபாய்க்கும், இஞ்சி 240 ரூபாய்க்கும், கோவக்காய் 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், மாங்காய் 80 ரூபாய்க்கும், மரவள்ளிக்கிழங்கு 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 65 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும், முள்ளங்கி 20 ரூபாய்க்கும், புடலங்காய் 40 ரூபாய்க்கும், தக்காளி 40 ரூபாய்க்கும், வாழைப்பூ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web