சரசரவென குறைந்த காய்கறிகளின் விலை... மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து காய்கறிகளின் விலை அதிகரித்து வந்த நிலையில், வெங்காயம், தக்காளி உள்ளிட்டவைகளின் வரத்து அதிகரித்துள்ளதால், சரசரவென காய்கறிகளின் விலை குறைந்து வருவது பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவைகளின் விலை குறைந்துள்ள அதே நேரத்தில் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. கேரட் விலை மட்டும் தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது
தமிழகத்தில், ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே வருகின்றது. இந்நிலையில், தொடர் மழை, பனி பாதிப்பு காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விற்பனை விலையும் சற்று அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கேரட் விலை ரூ.100யைத் தொட்டுள்ளது.
வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், பச்சை பட்டாணி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் புடலங்காய் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டதாலும், காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதாலும் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!