பெற்றோர்களே உஷார்... 11 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய உயிருள்ள மீன்கள்!

 
தொண்டையில் மீன்

11 மாத குழந்தையின் தொண்டையில் 2 உயிருள்ள மீன்கள் சிக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகா மாநிலம் கஞ்சேனஹள்ளியைச் சேர்ந்த தம்பதியர் யோகேஷ் - ரோஜா .இவர்களின் 11 மாத குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதற்காக குழந்தையின் பாட்டி, வீட்டில் இருந்த மீன் தொட்டியில், நீந்திக் கொண்டிருந்த மீன்களை கையில் பிடித்து குழந்தைக்கு விளையாட்டு காட்டியுள்ளார்.  

மீன்கள்

அப்போது தொடர்ந்து அழுகையை நிறுத்தாத குழந்தை, திடீரென பாட்டியின் கையை தட்டிவிட்டதால், பாட்டியின் கையில் இருந்த மீன்கள் குழந்தையின் வாயில் விழுந்து தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. குழந்தையின் தொண்டையில் மீன்கள் சிக்கிக் கொண்டதால் மூச்சுவிட முடியாமல் குழந்தை திணறியது. உடனடியாக குழந்தையின் பெற்றோர், அலறியடித்தபடி, வீட்டின் அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிச் சென்றனர்.  மருத்துவர்கள், குழந்தைக்கு உடனடியாக முதலுதவி அளித்து, குழந்தையை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மீன்கள்

தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்த போது, குழந்தையை சோதனை செய்த மருத்துவர்கள், குழந்தையின் தொண்டையில் 10 செ.மீ நீளமுள்ள இரண்டு மீன்கள் உயிருடன் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, தொண்டையில் சிக்கிக் கொண்டிருந்த மீன்களை அகற்றினார்கள். அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை தற்போது நலமுடன் உள்ளதாக பெற்றோர்கள், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்  பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web